Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பிட கூசும் வேட்பாளர்கள்

ஏப்ரல் 06, 2019 06:32

சிவகங்கை: முன்பெல்லாம், தேர்தல் நேரத்தில், வேட்பாளர்கள் பலரும், வாக்காளர்கள் காலில் விழுந்து கூட ஓட்டு கேட்பர். தற்போது, ஒரு சில தொகுதிகளில், மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர்கள், இப்படி காலில் விழுந்து ஓட்டு கேட்கின்றனர். 

சிவகங்கை தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், கார்த்தி, பா.ஜ., சார்பில், களமிறங்கியுள்ள, எச்.ராஜா ஆகியோர், பிரசாரத்திற்கு கிராமங்களுக்கு செல்லும் போது, 'கெத்து காட்டி' சற்றும் இறங்கி வராமல், ஏதோ பெயருக்கு ஒரு தடவை, மொத்தமாக கை கூப்பி வணக்கம் தெரிவித்து விட்டு செல்கின்றனர். 

இது குறித்து, கிராம வாக்காளர்கள் சிலர் கூறியதாவது: முன்பெல்லாம், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்கள், நடந்தே வீட்டுக்கு வீடு சென்று, ஒவ்வொருவரையும் கையெடுத்து கும்பிட்டு, ஓட்டு கேட்பர். ஒரு சிலர் காலில் விழுந்தும், ஓட்டு கேட்பர். வெற்றி பெற்று சென்ற பின், நாங்கள் அவர்களை பார்த்து, ஐந்து ஆண்டுகளும் கும்பிட வேண்டும். இப்போது எல்லாம், ஒரு தடவை கும்பிடுவதற்கே யோசிக்கின்றனர். இந்த கூத்தில், இவர்கள் ஜெயிச்சா எப்படியோ? இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்